எங்களை பார்த்தா அதிமுக கட்சியே இருக்காதுனு சொல்ற… பாஜகவின் இராம சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதிலடி!!!
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மதுரை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் பேசுகையில், ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள எஃகு கோட்டை அதிமுக என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக என்றைக்கு ஒன்றரை கோடி ஓட்டு வாங்கி இருக்கிறது? ஜெயலலிதா இருக்கும் போது இருந்த அதிமுகவை பற்றி பேசவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு எந்த தேர்தலில் அதிமுக ஒன்றரை கோடி ஓட்டுகளை வாங்கி உள்ளது? ஜெயலலிதா கூட்டணியே வேண்டாம் என்று சொல்லி தனித்துப் போட்டியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியால் அப்படி தனித்து போட்டி போட முடிந்ததா? ஜெயலலிதாவுக்கு இருந்த அரசியல் ஆளுமை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? அண்ணா திமுக என்ற கட்சியே இந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இருக்காது. ஏனென்றால் செல்வாக்கை அந்தக் கட்சி இழந்துவிட்டது.
பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு அதிமுக தள்ளப்படும். இவ்வளவு பெரிய சரிவை சந்தித்த பிறகும், அதிமுகவை கட்டி காப்பாற்ற எடப்பாடி ஒன்றும் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி அப்படிப்பட்ட ஆளுமையான தலைவர் இல்லை எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ராம சீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மதுரையில் பாஜக பொதுச் செயலாளர் பேசி இருக்கிறார். மதுரை பாஜக வேட்பாளராக இருக்கும் ராம சீனிவாசன் பேசி உள்ளார். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.
இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். ஏய். உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தது அதிமுக. நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் நாங்கள். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.
அதிமுக இருக்காது என்று சொல்கிறார். பொறுத்திருந்து பார், இந்த தேர்தலோடு பெட்டி அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் அடையாளம் இன்றி போய்விடுவீர்கள். 1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான். எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?” என ஆவேசமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.