சூடா ஒரு டீ சொல்லுப்பா… சாலையோர தேநீர் கடையில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த இபிஎஸ்!!
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பெற்ற சட்டமுன்வடிவுகளை மீண்டும் சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் விதமாக நேற்றைய தினம் தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, பாதியிலேயே வெளிநடப்பு செய்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லம் திரும்பினார். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை சென்னையிலிருந்து சேலத்துக்கு புறப்பட்டார்
ரயில், விமானப் பயணங்களை தவிர்த்து சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக தனது இன்னோவா காரில் பயணித்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தடைந்தார்.
முன்னதாக சேலம் புறநகரில் உள்ள சாலையோர தேநீர் கடைக்கு சென்ற அவர், சூடா ஒரு டீ சொல்லுப்பா என தேநீர் வாங்கிக் குடித்தார். அவருடன் சேலம் இளங்கோவன் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோரும் காரில் ஒன்றாக பயணித்தனர்.
ஜாலியாக, ரிலாக்ஸாக பேசிக்கொண்டே எடப்பாடி பழனிசாமி டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த 5 நிமிடத்தில் மாறி மாறி அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் அங்கிருந்தவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
அதனை எடப்பாடி பழனிசாமியின் பி.எஸ்.ஓ.க்கள் தடுக்கவில்லை. தேநீர் குடித்த பிறகு கார் ஏறச் சென்ற எடப்பாடி பழனிசாமியுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அங்கிருந்த பலரும் ஆர்வம் காட்டினர்.
தனது பயணக் களைப்புக்கு மத்தியிலும் புன்னகையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுத் தான் கார் ஏறச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. பொதுவாக தேர்தல் பிரச்சாரக் காலங்களில் தான் இது போன்ற திடீர் சர்ப்ரைஸ்களை எடப்பாடி பழ்னிசாமி கொடுப்பார்.
நேற்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இவ்வாறு திடீர் விசிட் அடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.