டெல்லி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக அளித்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக என 79 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தல் விதிகளை திமுக மீறுவதாக அதிமுக சார்பில் அடுத்தடுத்து பல்வேறு புகார்களை அளித்து வருகிறது.
அந்த வகையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகார் மனுவில், ஈரோடு இடைத்தேர்தலில் வரும் 27 ல் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலையொட்டி வேறு பகுதியில் வசிக்கும் நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாகவும், பல பெண்கள் பெயர்கள் 2 முறை இருப்பதாகவும் அதிமுக புகார் அளித்திருந்தது. மேலும் வாக்காளர் விவரம் விற்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா ஷாகுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.