எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளார். இருந்தாலும், அவர் அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நினைத்து வருகிறார்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். திமுக வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், மத்திய அரசின் மூலமாக பணிகள் கிடைக்கும் என்பது அதிமுகவின் ஒரு ஆசை, பதவியை எதிர்பார்த்து எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டோம் என்றார்.
அதிமுகவில் சசிகலா இணைவது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், கழக ஒருங்கிணைப்பாளர் கூறியது போல் அதிமுகவை பொருத்தவரை அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.