எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளார். இருந்தாலும், அவர் அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நினைத்து வருகிறார்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். திமுக வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், மத்திய அரசின் மூலமாக பணிகள் கிடைக்கும் என்பது அதிமுகவின் ஒரு ஆசை, பதவியை எதிர்பார்த்து எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டோம் என்றார்.
அதிமுகவில் சசிகலா இணைவது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், கழக ஒருங்கிணைப்பாளர் கூறியது போல் அதிமுகவை பொருத்தவரை அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.