பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. திராவிட கழகம் முன்பு அந்த முயற்சியை கையில் எடுத்தார்கள். தற்போது, காங்கிரஸ் என கூறிக்கொள்ளும் குண்டர்கள் அந்த முயற்சியில் இறங்கி இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
நேற்று மோதலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளா..? என தெரியாது. இவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு தாருங்கள். காவல் துறையினர் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.
குமரி மாவட்ட காவல்துறை தன்னுடைய மரியாதையை இழந்து வருகிறது. மாவட்ட மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுங்கள். மாவட்ட மக்களுக்கு காவல்துறையை சேர்ந்தவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆகவே, இதை வலியுறுத்தி வரக்கூடிய ஆறாம் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரத போரட்டம் பாஜக சார்பில் நடைபெருகிறது.
இந்த போராட்டம் பாஜக போராட்டம் என்று நினைக்காமல், தன் கடமையில் இருந்து தவறிய காவல் துறையினருக்கும், சேர்த்து நடத்தும் போராட்டமாக இது இருக்கும், எனக் கூறினார்.
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.