போதைப் பொருள் கடத்தல்; ஜாஃபர் சாதிக்குக்கு ஜாமீன் கிடைத்தது; வைக்கப்பட்ட செக்,..

திமுக வில் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து சத்துமாவு தேங்காய் பவுடர் போன்றவற்றுடன் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2500 கோடி ரூபாய் அளவுக்கு போதை பொருளை கடத்தியுள்ளது தெரியவந்தது. தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.போதைப் பொருள் சர்ச்சைக்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, கடந்த மார்ச் 9ஆம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது திரைத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வழக்கு விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட் கிழமையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

செல்போனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகவரி மாறினால் அது குறித்த விவரத்தையும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.மேலும் ஜாமீன் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப் பொருள் வழக்கில் ஜாமின் பெற்றிருந்தாலும் ஜாபர் சாதிக் வெளியே வர முடியாத நிலையில் செக் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக் திஹார் சிறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலலை ஏற்பட்டுள்ளது.

Sudha

Recent Posts

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- வானவில்லா நீ? நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

24 minutes ago

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

3 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

3 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

3 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

4 hours ago

This website uses cookies.