படுக்கை அறையில் போதையில் முன்னாள் பெண் எம்பி : அரை குறை ஆடையுடன் சிக்கிய மர்மநபர்.. 2வது கணவரின் புகாரால் சிக்கல்!!

சென்னை : தனக்கு தெரியாமல் மர்மநபர்களை வீட்டிற்கு அனுமதித்த முன்னாள் பெண் எம்பி மீது கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளவர் சசிகலா புஷ்பா. அதிமுக முன்னாள் எம்பியாக இருந்தவர். தற்போது இவர் சென்னை பாடி டிவிஎஸ் காலனி பகுதியில் உள்ள ஜீவன் பீமாநகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு தெரியாமல் வீட்டு படுக்கை அறையில் மர்மநபர்களை அனுமதித்தாக இரண்டாவது கணவர் ராமசாமி ஆன்லைனில் சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்த வீடியோவை ஆதாரமாக திரட்டி வழக்கறிஞர் ராமசாமி புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகி காரில் கடந்த 13ம் தேதி எனது மகளுடன் சென்னை வந்தேன்.

சென்னை ஜீவன் பீமா நகரில் உள்ள எனது வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன், அப்போது அமுதா என்பவர் கதவை திறந்தார். வீட்டு படுக்கை அறையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடந்தன. மேலும் ஆல்கஹால் வாடையும் வீசியது. படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்திருந்தார். மற்றொரு அறையில் அறைகுறை ஆடையுடன் அடையாளம் தெரியாத மர்மநபர் இருந்தார்.

இதைப்பார்த்த நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன், அப்போது அந்த நபரும் அமுதா என்பவரும் என்னை ஆபாசமாக திட்டினர். எனவே அவர்கள் மீதும், கணவனாகிய எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ராமசாமி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட ஜெஜெ நகர் போலீசார், சசிகலா புஷ்பாவை காவல்நிலையத்திற்கு நேரில் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.