காலம் தாழ்த்தியே கபட நாடகம் ஆடி மருத்துவர்களை ஏமாற்ற நினைக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;- மாண்புமிகு அம்மாவின் அரசின் காலத்தில் மருத்துவத்துறை மகத்தான துறையாக விளங்கியது. நகர்ப்புறம் முதல் கிராமப்புறங்கள் வரை அம்மா மினிகிளினிக் திட்டம் மூலம் மக்கள் பயனடைந்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைத்ததால் மூடுவிழா செய்தது இந்த மக்கள் விரோத அரசு.. மாண்புமிகு அம்மா அரசின் கீழ் மக்கள் நலன் கருதி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுத் தந்தார் நம் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார்!
இன்று ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக்கல்லூரிகள் வரை மருத்துவர்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. மாண்புமிகு அம்மா அரசால் 8000 மருத்துவர்கள் ஏழு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டனர். பற்றாக்குறை பல்லாயிரம் இருந்தும் திமுக அரசு நியமித்த மருத்துவர்கள் எண்ணிக்கை என்ன?
உடனடியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த MRB Assistant surgeon General (மருத்துவர் )தேர்வு எழுதிய மருத்துவர்களுக்கு 1021 பணியிடங்கள் உடன் கூடுதலாக உள்ள 731 காலிப்பணியிடங்களையும் தேர்வின் முடிவின் அடிப்படையில் நிரப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.