சென்னை : திருச்சியில் நடத்தப்போகும் கூட்டத்தின் மூலம் கருப்பு பணத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியே எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஆளுநரை பொறுத்தவரை அரசியல் அமைப்பு சட்டத்தில் என்ன சொல்கிறதோ அதை பொறுத்து தான் இயங்க வேண்டும். திமுக அரசை பொறுத்தவரை இவர்கள் என்ன சொன்னாலும் ஆளுநர் சரி என்று சொன்னால் வாழ்க என்று சொல்வார்கள். எதிர்கட்சியாக திமுக இருக்கும் போது சட்டமன்றத்தில் சட்டை , பனியனை கிழித்து கொண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தானே போனாங்க.
ஓ.பி.எஸ். திருச்சியில் 24ம் தேதி கூட்டம் வைத்துள்ளார்கள். இதற்கு யாரை வேண்டும் என்றாலும் அழைத்து கொள்ளட்டும். எங்களுக்கு விட்டது சனியன்.
ஓ.பி.எஸ் கிட்ட இருக்கும் கருப்பு பணம் கூட்டம் மூலமாக வெளியே வரும்.
ஓ.பி.எஸ் கருப்பு பணம் 200, 300 ஆக மக்களுக்கு போகும்.
கலாஷேத்திரா கல்லூரி விவகாரத்தில் விசாரணை போகுது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் இல்லாத போது Go Back Modi. ஆட்சியில் இருக்கும் போது Come Back Modi என்று சொல்வார்கள், என தெரிவித்துள்ளார்.
பிரதமர் பாதுகாப்பில் ஏதோ குளறுபடி இருந்துச்சாம். இது உங்களுக்கு தெரியுமா என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், சட்டமன்றத்தில் பேச்சு உரிமை என்ற ஒன்றே இல்லை. எதிர்கட்சி துணை தலைவராக ஓ.பி.எஸ் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. இது குறித்து பல தடவை எடுத்து சொல்லியாச்சு. சட்டமன்ற உறுப்பினர்களை விட சபாநாயகர் தான் அதிகம் பேசுகிறார். உறுப்பினர்களை பேசவிடுவதில்லை, என தெரிவித்துள்ளார்.
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.