சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை குறித்து ஏதாவது கேள்வி கேட்டால், தெர்ம கோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:- துப்பாக்கி குண்டுக்கே டாட்டா காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர். சதுரங்க வேட்டை திரைப்படம் போல் முதல்வர் நம்மள ஏமாற்றுக்கிறார், எனக் கூறினார்.
வாரிசுக்கு கழகத்தில் இடமுண்டா என்ற கேள்விக்கு, இந்த கழகம் சங்கர மடம் கிடையாது என்றார். அடுத்து நாளொரு மேனியும்பொழுது ஒரு வண்ணமுமாக மகன், பேரன் என வந்து நம்மள ஏமாற்றுக்கிறார். இதை அப்பவே தலைவர் எம்ஜிஆர் சொன்னார்.
இங்க வந்து ஸ்டாலின் பேசும்போது தெர்மக்கோல் இங்கு நிற்கிறார். அவரை எதிர்த்து பெண்ணை நிறுத்தியுள்ளதாக சொன்னார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 25 லட்சம் மக்கள தெருவில விட்டுட்டாங்க. அப்பவே எம்.ஜி.ஆர். முதியோர் பென்சன் நூறு ரூபாய் வழங்கினார். தலைவர் கொண்டு வந்த திட்டம் இப்பவும் இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு கல்யாணம் ஆகல. அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்த திட்டம் தொட்டில் குழந்தை திட்டம். கொள்கை என்பது வேஷ்டி. கூட்டணி என்பது தோளில் கிடக்கும் துண்டு எப்ப வேணாலும் தூக்கி போடுவோம். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தினீர்களே முதல்வரே, இது நியாயமா?
அண்ணா வளர்த்த கட்சியை இன்று குடும்ப கட்சியாக மாற்றிவிட்டனர் திமுக. திமுக ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டணம் உயர்வு. அதனால் வீட்டு வாடகையை உயர்த்திட்டாங்க. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்சன் தான். முதல்வருக்கு தைரியம். ஆமாப்பா ஐந்து வருடம் அண்ணனுக்கு பயந்து மதுரை பக்கம் வரல. ஜெயலலிதா ஆட்சியில் தான் சுதந்திரமாக மதுரைக்கு வந்தார்.
பிடிஆர் உண்மையை சொன்னார். இன்று பல்லை பிடுங்கி இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். ஒரு திட்டம் மதுரைக்கு இல்ல. அமைச்சர்கள் ராஜினாமா பண்ணிட்டு போங்க. சட்டமன்றத்தில் ஏதாவது கேள்வி கேட்டா தெர்ம கோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க.
குடிநீர் பற்றி சட்டமன்றத்தில் பேசினா, பெத்தானியாபுரம் பகுதியில் நான்கு குடிநீர் தொட்டிகள் கட்டியிருக்கிறாராம். நான்கு வார்டுக்கு மட்டும் போதுமா? நூறு வார்டுக்கும் தூய குடிநீர் கிடைக்க வேண்டாமா. அதற்கு தான் 1250கோடி ரூபாயில் முல்லை பெரியாறு கூட்டுகுடி நீர் திட்டம் கொண்டு வந்தார் எடப்பாடியார். யப்பா ஜோரா கைத்தட்டுங்கப்பா. வரவர மாறப்போகிறது. சதுரங்க வேட்டையில் எடப்பாடியார் பின்னி எடுக்க போகிறார். என்றார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் சரவணன், அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் முத்துவேல், கருப்புசாமி, மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி மற்றும் திரளான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.