கோவை ; டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:- தமிழகத்தில் கல்குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆயிரம் கல்குவாரிகள், 3 ஆயிரம் கிரசர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கோவையில் இருந்து 5000 லோடு கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் குறித்து அரசின் கவனத்திற்கு வந்ததா? என தெரியவில்லை. அரசு எதிலும் கவனம் செலுத்தவில்லை. டாஸ்மாக் பிரச்சனையை விட இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. அரசிற்கு கட்டும் தொகையை விட அதிகமாக இலஞ்சம் வசூலித்து இந்த துறையை முடக்கி விட்டனர். எம் சாண்ட் குவாரிகளை முடக்கி மீண்டும் மணல் குவாரிகள் அமைக்கும் வாய்ப்பை இந்த அரசை உருவாக்கியுள்ளது. கேரளாவில் இருந்து ஒரு லோடு மணல் கூட எடுத்து வர முடியாது. தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளுநர் தலையிட்டு கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துபவர்கள் மற்றும் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அம்மா சிமெண்ட் குறைந்த விலையில் வழங்கப்பட்டது. திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கியுள்ளது. திமுக அரசு எதுவும் செய்யவில்லை, என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறை நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறி செந்தில்பாலாஜி குறித்து பேசாமல் சென்றார், எனக் கூறினார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.