முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு உள்ளிட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கரின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது தேர்தல் பணிகளின் காரணமாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை எம்எல்ஏவுமான டாக்டர் சி விஜயபாஸ்கர் சென்னையில் தங்கியிருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையில் அவரது தந்தையார் சின்னத்தம்பி மற்றும் அவரது தாயார் அம்மாக்கண்ணு ஆகியோர் வீட்டில் இருந்தபோது, அமலாக்கத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்குழுவில் மதுரையில் மதுரையில் இருந்து 15 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட அளவில் உள்ள அதிமுகவினரும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களும் வீட்டின் முன் குவிந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வேட்பாளர் தேர்வு, வேட்பு மனு தாக்கல், கட்சியினரை ஒருங்கிணைத்தல் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை என வினாடிப் பொழுதையும் வீணாக்காமல் விஜயபாஸ்கர் செயல்பட வேண்டிய நேரத்தில் இப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் ரேட் நடத்திக் கொண்டிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு உள்ளிட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் விஜயபாஸ்கர் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.