கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஹாசினி என்ற 8 மாத குழந்தையும் உள்ளனர்.
இந்த சூழலில் தமிழரசியின் சகோதரியான தனலட்சுமிக்கும், அவரது கணவர் சத்குருவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், அவர் தனது குழந்தையை எடுத்துக் கொண்டு தனலட்சுமி வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளார். மேலும், சத்குருவின் மீது தனலட்சுமி போலீசிலும் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், மனைவியின் மீது கோபத்தில் இருந்த சத்குரு, இன்று திடீரென தமிழரசியின் வீட்டுக்கு வந்து தனலட்சுமியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனலட்சுமி மற்றும் அவரது குழந்தையின் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதனை தடுக்கச் சென்ற தமிழரசி, தமிழரசியின் குழந்தை ஹாசினி மற்றும் சத்குருவின் மீதும் அந்த பெட்ரோல் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதில் தமிழரசி, தமிழரசியின் குழந்தை ஹாசினி, தனலட்சுமி, தனலட்சுமியின் 4 மாத குழந்தை மற்றும் சத்குரு என 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், அந்த வீட்டில் உள்ள இருவர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.