எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து புதிய அறிக்கையை வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம்..!
22 August 2020, 2:27 pmசென்னை : பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணயிம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவ நிபுணர் குழு கடந்த 16 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் எக்மோ கருவிகள் பொருத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எஸ்.பி.பி.யின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. இதனால், வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ சிகிச்சையால் உடல்நிலை சீராக உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.