பெயரை மாற்றி 8 வழிச்சாலை திட்டமா?: விவசாயிகளை சீண்டினால் சும்மா விடமாட்டோம்…திமுகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்..!!

சேலம்: எட்டு வழி சாலையை தற்போது விரைவுச் சாலை என பெயர் வைத்து அதற்கான பணிகள் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் நலன் கருதி பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

அதை தொடர்ந்து கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட சேலம் – சென்னை இடையே எட்டு வழி சாலையை தற்போது விரைவுச் சாலை என பெயர் வைத்து அதற்கான பணிகள் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு கூட்டு இயக்கத்தின் தலைவர் காவிரி தனபாலன் தலைமை வகித்தார். தொடர்ந்து விவசாயிகள் நலம் கருதி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கடந்த ஆட்சி காலத்தில் எட்டு வழி சாலை திட்டமாக இருந்து தற்போது விரைவு சாலை என்ற திட்டத்திற்கு 70% விவசாயிகளின் ஒப்புதலை பெற வேண்டும்.

மேட்டூர் அணை சுற்றி உள்ள தொழிற்சாலையிலிருந்து கால்வாய் மூலமாக காவிரியில் கலக்கப்படும் கழிவுநீரை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக தடுக்க வேண்டும். சேலம் நாமக்கல் மாவட்டத்தில் ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்பது சுத்தம் செய்து வெளியேற்ற ஆலைகளுக்கு உத்தரவிட வேண்டும்.

சேலம் திருமணிமுத்தாறு சாயக் கழிவுகள் கலப்பதை நடவடிக்கை எடுத்து அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தலைவர் காவிரி தனபால் கூறுகையில்,

அதிமுக ஆட்சி காலத்தில் சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டு வழி சாலை திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக இறந்த திமுக தற்பொழுது அந்த திட்டத்தின் பெயரை மாற்றி விரைவுச் சாலை என்ற பெயரில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், பெரும்பான்மை விவசாயிகளின் ஒப்புதல் பெறாமல் அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று கூறினார்.

மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக அதிகாரிகளைக் கொண்டு விவசாயிகளை மிரட்டி பொய் வழக்குப் போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்தார்.

இதேபோல், தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் உடல்ரீதியான பிரச்சனைகளும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

27 seconds ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

23 minutes ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

24 minutes ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

1 hour ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

2 hours ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

3 hours ago

This website uses cookies.