சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் (வயது 64). இவர் செங்குன்றம் பகுதியில் மோட்டார் வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜமீலா. இந்த தம்பதிக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
பெண் குழந்தை இல்லாததால் கடந்த 17ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் ஒரு மாத பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு ஷெரீப் மற்றும் அவரது மூன்று மகன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுபற்றி தெரிந்தும் ஷெரிபின் மனைவி ஜமீலா கண்டும் காணாமல் இருந்துள்ளார்.
நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவு அதிகமாகவே 17 வயது சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் மூலமாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து , வளர்ப்பு பெற்றோர் ஷெரிப்- ஜமீலா, மற்றும் அவர்களது மகன்களான இம்தியாஸ், இர்பான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செரீப் ஜமீலா தம்பதியின் மற்றொரு மகன் ஹனிபை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.