தூத்துக்குடி செல்லும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. நாளை மறுதினம் மக்களை சந்திக்கிறார்!!

தூத்துக்குடி செல்லும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. நாளை மறுதினம் மக்களை சந்திக்கிறார்!!

கடுமையான மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் பாதித்தன. மிக கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகள் முழு அளவில் சகஜ நிலைக்கு வரவில்லை.

வானிலை ஆய்வு மையம் முறையாக எச்சரிக்க தவறிவிட்டதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது. ஆனால் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை. முதலமைச்சரே இந்தியா கூட்டணிக் கூட்டத்துக்கு சென்றுவிட்டார். மத்திய அரசு உடனடியாக ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்களை அனுப்பி மீட்பு பணியில் ஈடுபட்டது. மழை நீர் வடிகால் ஓடை அமைக்க கொடுக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி பணத்தை முறையாக செலவிடவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பரபரப்பாக புகார் கூறினார்.

அவரது இந்தக் கருத்துக்கு அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வெள்ள நிவாரண நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட செல்கிறார். தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்க்கிறார்.

ஏற்கனவே மத்திய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வுசெய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்கவேண்டும் என்று கேட்டுள்ளது. இதற்கிடையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, விரைவில் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கும் என்று குறிப்பிட்டார். எனவே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு நிர்மலா சீதாராமன் நிவாரண நிதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.