சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில், கரும்புகையுடன் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.அதனால் அங்கு பதற்றம் நிலவியது.
உடனடியாக அருகில் இருந்த நோயாளிகள் வேறொரு அறைக்கு மாற்றப்பட்ட நிலையில் இதுகுறித்து மருத்துவ ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
தீ பரவல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.பின்னர் தகவல் அறிந்த வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.