மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயரை வைக்க முடியாது.. ஜனாதிபதி திரௌபதி முர்மு நிராகரிப்பு!
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு பெயர் மாற்றம் செய்ய அதிமுக அரசு முடிவு செய்தது.
மேலும் பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட திட்டமிடப்பட்டது.
அதாவது தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிலிதா மீன்வள பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய அதிமுக ஆட்சிக்காலத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஆளுநர் ஒப்புதல் தராததால் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து பல்கலைக்கழக பெயர் மாற்றம் தொடர்பாக திமுக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைத்தது. அதாவது மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தராததால் அதற்கு முன் இருந்த பெயரிலேயே மசோதா கொண்டு வரப்பட்டது.
திமுகவின் இந்த மசோதா சட்டசபையில் நிறைவேறிய நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்என் ரவி அந்த மசோதாவை கிடப்பில் போட்டார். அதன்பிறகு ஒருவழியாக அவர் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் தான் நாகை மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் வைக்கும் பரிந்துரையை ஜனாதிபதி திரெளபதி முர்மு நிராகரிப்பு செய்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரையை அவர் நிராகிரக்கப்பட்டு செய்தார். மேலும் தமிழக ஆளுநர் அனுப்பிய பரிந்துரையை நிராகரிப்பதாக அரசுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் நாகை மீன்வள பல்கலைக்கழகம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் என்ற பெயரிலேயே தான் அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.