திமுக அரசின் பிராண்ட் அம்பாசிடராக மீனவர்கள் செயல்பட வேண்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!!

திமுக அரசின் பிராண்ட் அம்பாசிடராக மீனவர்கள் செயல்பட வேண்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!!

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன்,சேகர் பாபு, காந்தி ஆகியோர் பங்கேற்றனர்…

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலாநிதி வீராசாமி சென்னை மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டரும் பங்கேற்றனர். முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

அவரைத் தொடர்ந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகையை வழங்கி மேடையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மீனவர்களின் படகுகள்,வலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் தற்போது வழங்கப்படுகிறது.

விசைப்படுகள், பகுதியாக சேதம் அடைந்த படகுகள், வலைகளை உள்ளிட்டவைக்கு நிவாரணம் வழங்கபடுகிறது. தலா 9000 என மொத்தம் 12கோடியே 89லட்சம் இன்று பாதிக்கபட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீனவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பது என்றால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீனவர்கள் மீது முதலமைச்சர் தனி அக்கறை கொண்டவர் என்பதை நிரூபிக்கும் பல சான்றுகள் உள்ளது.

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, யார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுகிறார்களோ அவர்கள் தான் கடவுளுக்கு சமம் என்னை பொறுத்தவரை மீனவர்கள் ஆகிய நீங்கள் தான் கடவுள்களை (உங்களை)சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்தியாவின் ஊட்டச்சத்து மிகுந்த மாநிலம் தமிழ்நாடு தான் ,
அதற்கு காரணம் மீனவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் மீன்கள் தான்.

தமிழ்நாடு மிக்சாம் புயல் பேரிட நிவரணதிற்கு கேட்ட தொகை ஒரு ரூபாய் கூட இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை, இந்த கடும் சூழலிலும் முதலமைச்சர் மீனவர்களுக்கான நிவாரணத்தை வழங்கி உள்ளார், உங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவார்.

இந்த ஆட்சியில் மீன்பிடி தடைகால நிதி 5000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் அளவு உயர்த்தப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களத்தில் நின்று உதவி செய்தவர்கள் மீனவர்கள் தான். இந்த அரசின் பிராண்ட் அம்பாசிட்டராக, தூதர்களாக நீங்கள் (மீனவ மக்கள்) செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

19 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

35 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

43 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

This website uses cookies.