தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான சேவைக் கட்டணத்தை கண்டித்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தமிழக அரசுக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராகவும், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர் டிஆர்பி ராஜா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திமுக நிர்வாகிகளில் இவரும் முக்கியமானவராவார். தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான சேவைக் கட்டணத்தை கண்டித்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.
அதில், ”தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட் விலை ரூ.17,748 முதல் ரூ. 20,665 வரை விற்கப்படுகிறது; இந்த சேவை கட்டணத்தில் இலங்கைக்கே சென்று விடலாம். அதுமட்டுமல்லாமல், ”PeriAir” என்ற பெயரில் மாநில அரசே விமான சேவையை தொடங்கலாமே? தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு சிறகுகள் கொடுத்தவர் பெரியார்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.