தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான சேவைக் கட்டணத்தை கண்டித்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தமிழக அரசுக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராகவும், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர் டிஆர்பி ராஜா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திமுக நிர்வாகிகளில் இவரும் முக்கியமானவராவார். தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான சேவைக் கட்டணத்தை கண்டித்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.
அதில், ”தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட் விலை ரூ.17,748 முதல் ரூ. 20,665 வரை விற்கப்படுகிறது; இந்த சேவை கட்டணத்தில் இலங்கைக்கே சென்று விடலாம். அதுமட்டுமல்லாமல், ”PeriAir” என்ற பெயரில் மாநில அரசே விமான சேவையை தொடங்கலாமே? தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு சிறகுகள் கொடுத்தவர் பெரியார்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
This website uses cookies.