வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.. பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.. பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னையில் கடந்த 4-ந்தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த மிச்சாங் புயல் மழை பெரும் வெள்ள சேதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகளால் இயல்பு நிலை திரும்பியது. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சென்னைக்கு வந்து மழை சேதங்களை பார்வையிட்டார். அதேபோல் மத்திய குழுவும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வந்து மழை சேதங்களை பார்வையிட்டது. அப்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்தியக்குழுவினர் பாராட்டினர்.

இந்த நிலையில் நேற்று டெல்லிக்கு சென்றிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து நேற்று இரவு பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், பள்ளிக்கட்டிடங்கள், அரசு மருத்துவமனைகள், மின்சார கட்டமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது பற்றியும் பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்தியக் குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டது பற்றியும், நிவாரண பணிகளுக்காக மத்தியக்குழு பாராட்டியதையும் குறிப்பிட்டார்.

மேலும், மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தற்காலிக நிவாரண தொகையாக ரூ.7 ஆயிரத்து 33 கோடி, நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12 ஆயிரத்து 659 கோடியையும் விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி கடந்த 17, 18-ந்தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் விளக்கினார்.

மிச்சாங் புயல் மழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத கனமழை, தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

எனவே பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

16 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

17 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

18 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

18 hours ago

This website uses cookies.