13 வருஷமா உங்களுக்காக கத்திக் கத்தி செத்துக் கொண்டிருக்கிறேன்.. எனக்கு ஆதரவு கொடுங்க : சீமான் உருக்கம்!!

13 வருஷமா உங்களுக்காக கத்திக் கத்தி செத்துக் கொண்டிருக்கிறேன்.. எனக்கு ஆதரவு கொடுங்க : சீமான் உருக்கம்!!

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத்ஜோனை ஆதரித்து மீனவ பகுதியான திரேஸ்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் அணு உலை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை ஆகியவைக்கு எதிராக நாம் போராடிய போது ஏரெடுத்தும் பார்க்காத கண்ணெடுத்தும் பார்க்காத கட்சிகளிடம் தான் நாம் அதிகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

மேலும் அணு உலைக்கு எதிராக இங்கு உள்ள கட்சிகள் எதுவும் குரல் கொடுக்கவில்லை நாம் அணு உலை மீது உட்கார வில்லை அணுகுண்டு மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது சொன்னது யார்? என்பது குறித்து இதுவரை யாரும் சொல்லவில்லை மேலும் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.

7விழுக்காடு வைத்திருந்த தனக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை ஆனால் 0. 7 விழுக்காடு வைத்திருந்த தமாகாவிற்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கி உள்ளார்கள் இப்படிப்பட்ட கேடுகெட்ட சின்னங்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணாக்கி விடாதீர்கள்.

எதற்கெடுத்தாலும் நல்ல கடைக்கு போய் சாப்பாடு வேண்டும் நல்ல கடையில் தங்கம் வாங்க வேண்டும் நல்ல கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் ஏசி வாங்க வேண்டும் ஆறு மாதத்தில் கிழியக்கூடிய வேஷ்டி சேலைக்கு இவ்வளவு தூரம் யோசனை செய்து நல்ல கடையில் எடுக்கிறீர்கள் ஆனால் உங்களை ஐந்து ஆண்டுகள் ஆளக்கூடிய நபர்களை நல்லவர்களை நீங்கள் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் எங்கள் 40 பேரை அனுப்பி பாருங்கள் அங்கே அவர்களை திணற அடித்து விடுவோம் என்றார்

இந்த தேர்தல் பத்திரத்தில் திமுக காசு வாங்கியுள்ளதா இல்லையா ஆனால் உங்களிடம் வரும்போது ஞானஸ்தானம் செய்துவிட்டு வந்தது போதும் தீயில் இறங்கி புனிதமாக வந்த சீதையை போடும் வருவார்கள் திமுக தற்பொழுது ஆரம்பித்துள்ள கட்சி போல வந்து வாக்கு கேட்பார்கள் நாங்கள் வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று சொல்லுவார்கள் அதை நம்பி விடாதீர்கள்.

பாரதிய ஜனதா கட்சி கலவரத்தால் வளர்ந்த கட்சி மணிப்பூர் கலவரத்திற்காக இவர்கள் போராடுகிறார்கள் குரல் கொடுக்கிறார்கள் ஆனால் என் இன சொந்தங்கள் தம்பிகள் தங்கைமார்கள் தாய்மார்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்படும்போது வன்புணர்வு செய்யும்போது இவர்கள் எங்கே போனார்கள் குரல் கொடுத்தார்களா குஜராத் கலவரம் என்றாலும் மணிப்பூர் கலவரம் என்றாலும் இவர்களுக்கு எல்லாமே தேர்தல் தான் பதவி தான்

கர்மவீரர் காமராஜர் நல்ல மனிதர்களை தேர்ந்தெடுங்கள் என்றார் அதே போன்று நல்ல மனிதர்களை 40 நாடாளுமன்ற தொகுதி தொகுதிகளிடம் தேர்ந்தெடுங்கள் உங்களுக்காக நாடாளுமன்றம் சென்று அங்கு உள்ள நபர்களை கண்ணில்விரலை விட்டு ஆட்டி விடுவார்கள்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் 20 நாடுகள் எதிர்த்த போதும் துணிந்து தனியாக நின்று போராடினார் அதேபோன்று எத்தனை கட்சிகள் எதிர்த்து நின்றாலும் அவர்களை எதிர்த்து போராடக் கூடிய குணம் எங்களிடம் உள்ளது 2026 இல் எப்பாடுபட்டாவது தமிழகத்தில் ஆட்சியை அமைப்போம் என்றார்

மேலும் அவர் கூறுகையில் இலங்கையில் விடுதலைப் புலி பிரபாகரன் இருக்கும்போது இங்கு உள்ள மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததா சிறைபிடிக்கப்பட்டார்களா இல்லை எனவே எங்களுக்கு ஆதரவு அளித்தால் நாங்கள் அய்யனார் போன்று கடலில் துப்பாக்கியோடு ஒரு வீரனை நிறுத்தி மீனவர்களை காப்போம் என்றார். மேலும் மீன்பிடி தொழிலை அரசே ஏற்று நடத்தி மீனவர்களுக்கு அதற்குரிய சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது நமக்கு கிடைப்பதெல்லாம் சாதாரண சாலை மீன் உள்ளிட்ட மீன்கள் தான் ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள மக்களும் ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்களை சாப்பிடக்கூடிய நிலையை உருவாக்குவோம்.

13 ஆண்டுகளாக உங்களுக்காக கத்தி கத்தி சேர்த்துக் கொண்டிருக்கிறேன் ஆகவே எங்களுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு தாருங்கள் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

22 minutes ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

23 minutes ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

54 minutes ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

1 hour ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

1 hour ago

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!

கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…

2 hours ago

This website uses cookies.