பொய் வழக்கு போடுவதில் திமுக ஆட்சி ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான ஆட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இரண்டாவது நாளாக ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து எதிர்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், குறிப்பாக அதிமுகவை முடக்க வேண்டும் என பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர்.
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் வகையில் பொய் வழங்கு போடும் முதல்வர், சர்வாதிகாரிகள் எல்லாம் வராலாற்றில் எப்படி வீழ்ந்தார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு புத்தகம் கூட தயார்.
பொய் வழக்கு போட்ட பின் சட்ட போராட்டம் நடத்தி நீதிமன்றம் வழங்கி உத்தரவின் அடிப்படையில் கையெழுத்திட்டு வருகின்றேன். பேசினால் சிறை என்பது சர்வாதிகார நாட்டில் தான் நடக்கும். ஆகையால் இது குறித்து குடியரசு தலைவர், மனித உரிமை ஆணையம் என அனைத்து இடங்களிலும் புகார் மனு அளித்துள்ளோம். அதற்கான பதிலை திமுக அரசு சொல்ல வேண்டும்.
அமைச்சர் ராஜகண்ணப்பனை நீக்கமால் வேறு இலக்கா மாற்றம் செய்திருப்பது அவருக்கு கிடைத்த பரிசு தான். தண்டனை அல்ல. பெயருக்கு வெளியே திராவிட மாடல் என சொல்வது. வெளிநாடு முதலீடுகள் எல்லாம் எதற்கு என்பது நினைத்தால், மாலு மாலு சுரங்கனிக்காக மாலு என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. வெளிநாடு பயணத்தில் திமுகவின் குடும்ப ஆடிட்டர் ஏன் சென்றார் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும், என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.