சமூக நீதி பற்றி பேசும் திமுக ஏழைகளுக்கான தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்யலாமா.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..?

Author: Babu Lakshmanan
21 March 2022, 12:37 pm
Quick Share

சென்னை : அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களுக்கு திமுக மூடுவிழா நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறப்படும் திமுக நிர்வாகியை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கையை கட்டி இழுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற முன் ஜாமீனை தொடர்ந்து, திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நான்காவது முறையாக இன்று காலை கையெழுத்திட வந்தார்.

இவ்வழக்கில் அமைச்சர் ஜெயக்குமார் உடன் கைதான அதிமுக சேர்ந்த நிர்வாகிகள் சென்னையை சேர்ந்த இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் காளி என்ற பரமேஸ்வரன் (46), அம்மா பேரவை மாவட்ட செயலாளர் டெல்லி ராஜ் (37) ஆகியோரும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர்.

கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :- ஏழை, எளிய மக்களின் வாழ்வு மேம்பட எண்ணற்ற திட்டங்கள் குறிப்பாக சத்துணவு திட்டம், விவசாயிகள் எல்லா பயன்களும் பெற ஒருங்கிணைந்த திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பால்வளம், மீன்வளம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய பட்ஜெட்டை மொத்தமாக வேளான் பட்ஜெட் என கூறி விவசாயிகளை ஏமாற்றும் வேலையை செய்கிறது.

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த திட்டம் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தான் இந்த வேளாண் பட்ஜெட். ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் சமூக நீதி அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.

ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் தாலிக்கு தங்கம் திட்டம், திருமண நிதி உதவி திட்டம் ஆகியவை அ தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை ஆனால் சமூக நீதி என பேசும் தி.மு.க அரசு இந்த திட்டங்களுக்கு மூடுவிழா கண்டுள்ளது. அதற்கு பதிலாக அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதை இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றி விட்டார்கள்.

மக்கள் இதை உணர்ந்து தேர்தல் காலத்தில் உரிய முடிவெடுப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பஸ் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றை உயர்த்தி ஸ்டாலின் பல பரிசுகள் வழங்க உள்ளார், என தெரிவித்துள்ளார்.

Views: - 915

0

0