சென்னை : தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பங்கேற்றது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. இதற்கான பணிகளை 2023 மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜூம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் உடன்படுகிறோம். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுட ன் இணைப்பதை போன்று மற்ற 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.
அதிமுக சார்பில் தானும், பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்து கொண்டோம். கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்ந்தவர் என்பது தெரியாது. யாராவது எதையாவது சொல்வார்கள். அதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது.
தற்போது தொழில் துறையை பொறுத்தவரை செமி கண்டக்டர் உற்பத்தி தொழில் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழகத்தில் இத்தகைய செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட உள்ள வேதாந்தா மற்றும் பாக்ஸ் கான் நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து வெளியேறி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றுவிட்டன, எனக் கூறினார்.
திமுக சார்பில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கொட்டாம்பாக்கு கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி சொல்கிறார் என்பது போல அர்த்தம் புரியாமல் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.