வயநாடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 250 பேரை காணவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது
இந்த நிலையில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்ட உடன் படிக்கும் நிறைய மாணவர்களைக் காணவில்லை என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சூரல்மலை பகுதிக்குப் போகவே பயமாக இருக்கிறது எனவும் தெரிவித்து உள்ளனர்.இனி அங்கு செல்லும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் சொல்லியுள்ளனர்.
இனி நாங்கள் படிக்க எங்கே போவோம் என்ன செய்வோம் என்பது புரியாமல் இருக்கிறது என சொல்லியுள்ளனர் மாணவர்கள்.
பள்ளியின் நிர்வாகி ஒரு கன்னியாஸ்திரி பேசும்போது சூரல் மலை பகுதியில் இருந்து நிறைய மாணவர்கள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வந்து சென்றனர்.அந்த மாணவர்களில் 70க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் காணாமல் போயிருப்பதாக தெரிய வருகிறது .
முண்டக்கை என்ற இடமே இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது சூரல்மலை பகுதியில் முன்பு 350 வீடுகளுக்கும் மேல் இருந்தது.இப்போது வெறும் பத்து வீடுகள் மட்டுமே இருக்கிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரும் பேரழிவு எனவும் அவர் தெரிவித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.