தமிழகத்தை உலுக்கிய கூட்டுப் பாலியல் பலாத்காரம் : தப்பியோடிய கொடூரன்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு.. பரபரப்பு.. பதற்றம்!!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் தங்கி வேலை செய்யும் இளம் பெண் ஒருவர், கடந்த மாதம் 12ஆம் தேதி இரவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த பொழுது பைக்கில் வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று திருப்பெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் காட்டுப்பகுதியில் கூட்டு பாலியல் செய்துவிட்டு தப்பியோடியதாக காவலன் செயலில் புகார் அளித்திருந்தார்.

மேலும் அதேபோன்று திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் நான்கு புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளும்,பாலியல் வழக்குகளின் புகார்கள் இதுபோன்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக காவல்துறையினரின் வலையில் சிக்காத குற்றவாளிகள், கடந்த சில நாட்கள் முன்பு சிக்கியபோது தனது இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

தை தொடர்ந்து நேற்று முன் தினம் திருப்பெரும்புதூர் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சந்தேகப்படும்படியாக இருவரை மடக்கி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தநிலையில், உடனே திருப்பெரும்புதூர் காவல்துறையினர் இருவரையும் திருப்பெரும்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் பிரகாஷ் என தெரியவந்தது.

கடந்த 12ஆம் தேதி இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது இவர்கள்தான் என அதிர்ச்சி தகவலும் கிடைக்கப்பெற்றது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் தொடர் விசாரணையில் விசாரித்தபோது, இதுவரை 11 பெண்களை கூட்டு பாலியல் செய்ததாக கூறினர்.

அதைத் தொடர்ந்து இவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை கைப்பற்றுவதற்காக காஞ்சிபுரம் அருகே மேல்கதிர்பூர் தைலம் தோப்பு பகுதிக்கு காவல் துறையினர் இவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது தைலந்தோப்பில் உள்ள ஒரு பைக் கவரில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து போலீசாரை சுட முயற்சித்த போது, சுதாரித்துக் கொண்ட காவலர்கள் நாகராஜின் கால் பகுதியில் சுட்டு பிடித்தனர். மேலும் தப்பி ஓடிய பிரகாசை துரத்தி சென்ற பொழுது கீழே விழுந்ததில் பிரகாஷின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, இவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு போலிஸார் பாதுகாப்புடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து அவசர ஊர்தியில் அழைத்துச் சென்று உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

33 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

1 hour ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

4 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

4 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.