தன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையை நடிகை காயத்ரி ரகுராம் மீண்டும் வம்புக்கு இழுந்துள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் கட்சி வலுப்பெற்று வருவதாக எதிர்கட்சியினரே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.
அதுபோன்று வெளியேறியவர்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவில் இருந்து வெளியேறியது முதல் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனிடையே, காயத்ரி ரகுராம் மீது சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், தமிழக பாஜக துணைத் தலைவருமான ஜிஎஸ் மணி சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வரும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், தன் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்த பதிவில் கூறியிருப்பதாவது:- அண்ணாமலை, நான் உன்னை துஷ்பிரயோகம் செய்தேன், மிரட்டுகிறேன், உன்னை பிளாக்மெயில் செய்தேன் என்று ஜிஎஸ் மணி அவர்களிடம் அழுதாயா?, நான் எப்போது செய்தேன்? உங்கள் நகைச்சுவை கருத்துக்களுக்காக நான் சிரித்துவிட்டு என் நகைச்சுவை கருத்துகளை தெரிவித்தேன். அவ்வளவுதான்.. ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நீயும் சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளீர்கள்.. கருத்து சுதந்திரம் தானே.. கோச்சிக்க கூடாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.