புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு அருகில் லட்சுமி, விநாயகரின் படங்களையும் அச்சடிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களையும் அச்சடித்தால் நாடு செழிப்படையும். ரூபாய் மதிப்பு சரிவதை கடவுள் படங்கள் தடுக்கும்.
இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன்.
நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசிஇல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும்.
மாநகராட்சி தேர்தலுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருவதாகவும், டில்லி மக்கள் பா.ஜ.,வை புறக்கணிப்பார்கள். நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யும் முயற்சிகள் தவிர, எல்லாம் இறைவனின் ஆசிர்வாதம் வேண்டும். கரன்சி நோட்டுகளில் லட்சுமி- விநாயகர் உருவங்களை அச்சடித்தால், பொருளாதாரத்தை சீரமைக்க பெரிதும் உதவும் என கூறினார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.