சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து 7,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: உலகின் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவும் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணய கொள்கைகள் ஆகியவை காரணமாக தங்கம் இன்று ஒரே நாளில் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய மத்திய வங்கி நேற்று அறிவித்த வட்டி குறைப்பு தங்கம் விலை திடீரென உயர்ந்ததற்கு காரணம் ஆகும்.
இதன்படி, இன்று (அக்.18) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, பவுனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்.. யார் இந்த யாஹ்யா சின்வர்?
மேலும், வெள்ளி ஒரு கிராம் 2 ரூபாய் உயர்ந்து 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.