திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாடுமுழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக கேரளாவில் அரசு பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து கேரளாவில் அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி கேரள அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வழித்தடத்தில் கேரள அரசு பஸ் கட்டணத்தை 73 ரூபாயிலிருந்து 76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு பஸ்களிலும் அதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.