கிராமசபைக் கூட்டத்தில், அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அருகே அக்.,2ம் தேதியான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் தங்கள் பள்ளியில் உள்ள மின்சார இணைப்பு பிரச்சனை குறித்தும், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகிறார்.
இதுபோன்ற அலட்சியத்தினால் கட்டிடத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது..? யார் பொறுப்பு..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த மின்சார பிரச்சனையை சரிசெய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் என்றும், உங்களுக்கு ஏதேனும் வருமானம் வந்தால், அதை வைத்து அதனை சரிசெய்து கொள்ளுமாறு பிடிஓ தெரிவித்ததாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அவர் அரசு பள்ளிகளே சாபக்கேடு என்றும், பேசாமல் வேலையை VRS கொடுத்து சென்று விடலாம் எனக் கூறிய அந்த ஆசிரியை கண்ணீர் மல்க பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.