நீட் தேர்வு விலக்கில் ஆளுநர் சொந்த கருத்தை திணிக்கக்கூடாது.. நீட் பயிற்சி மையங்களை மூட ஒப்புக்கொள்வாரா? சீறும் அன்புமணி!!

சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு அடாவடிதனம் செய்கிறது இது கண்டிக்கத்தக்கது.

காவிரி படுகையில் அணைகளில் நிரம்பி இருக்கிறது, 84% நீர் இருக்கிறது. இங்கு நமக்கு வறட்சி இருக்கிறது இவ்வளவு தண்ணீர் வைத்துக் கொண்டு கொடுக்காத கர்நாடகா அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். இப்போதே கர்நாடக தண்ணீரை தராத சூழலை நம்மால் சமாளிக்க முடியவில்லை, மேகதாது அணையை கட்டினால் தண்ணீர் கிடைக்காது என கூறினார். எனவே தமிழக முதல்வர் அனைத்து கட்சியினரை அழைத்துக் கொண்டு டெல்லி செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

சமீபத்தில் நடந்த நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது. பள்ளியில் தாக்குதல் நடந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. போதைப் பொருள் அதிகளவில் பள்ளி அருகே விற்க்கப்படுகிறது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

என்.எல்.சி.மூன்றாவது சுரங்கம் அமைக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, சமீபத்தில் கூட நெய்வேலியில் 26 கிராமங்கள் அடங்கிய 12,500 ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பகுதியில் வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக வருகிறது. என்.எல்.சி.நிர்வாகம் மூன்றாவது சுரங்கம் அமைக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. என்.எல்.சி.விவகாரத்தில் பாமக உணர்வு பூர்வமாக போராடி வருகிறது. 65000 ஏக்கர் விளைநிலங்களை தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இதில் 40000 ஏக்கர் நிலங்களை அழித்து விட்டனர். சோறு போடும் புண்ணிய மண் இது,

45 ஆண்டுகளில் விவசாய நிலம் 12% குறைந்துள்ளது, கடந்த 50 ஆண்டுகளில் விவசாய நிலம் குறைந்து போயுள்ளதால் எங்கு நமக்கு சோறு கிடைக்க போகுது என கேள்வி எழுப்பினார். என்.எல்.சி. தமிழகத்திற்கு 800 மெகாவாட் மின்சாரம் தருகிறது. அதிகளவில் ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் தான் கொடுக்கிறது. எங்கள் மண்ணை அழித்து அவர்களுக்கு ஏன் மின்சாரம் தர வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தேவைபட்டது அப்போது மின் பற்றாக்குறை இருந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக அமைச்சர் சொல்கிறார். அதனால் என்.எல்.சி.தேவையில்லை.

நீட் மசோதாவிற்கு எதிரான தீர்மானத்தில் கையெழுதிட மாட்டேன் என ஆளுநர் சொல்வது அவர் சொந்த கருத்தை திணிக்க கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். இது மக்களுடைய விருப்பம். எனக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடிக்காது என ஆளுநர் பிரதிபலிக்க கூடாது.

தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேவையில்லை என தெரிவிக்கிறார்கள். ஆளுநர் சொல்லியது ஏற்றுக்கொள்ள முடியாது. காசு இருந்தா மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.7.5% இட ஒதுக்கீடு இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் இருந்திருப்பார்கள்.

எதற்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு நடத்துகிறீர்கள் நீட் மட்டும் நடத்துங்க, அறிவு சார்ந்த கல்வி இல்லை, பயிற்சி சார்ந்த கல்வி இல்லை என்றார். நீட் பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் மூட வேண்டும் என ஆளுநர் ஒப்புக் கொள்வாரா? என அன்புமணி கேள்வி எழுப்பினார். நீட் ஏழை பிள்ளைகளுக்கு எதிரானது ஆளுநர் இது போன்ற பேச்சை நிறுத்தி கொள்ள வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

28 minutes ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

51 minutes ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

2 hours ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

2 hours ago

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

4 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

4 hours ago

This website uses cookies.