உங்க பாட்சா ஆளுநர்கிட்ட பலிக்காது, உங்க மகன் கிட்ட காட்டுங்க : திமுக அமைச்சர் மீது ஆளுநர் தமிழிசை காட்டம்!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியை இறுதியில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர் சந்தித்தபோது கூறியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் மற்ற மதத்தினருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்த வருகிறார். இந்து மதத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில்லை என கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாம் மற்ற மதத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் நாம் நமக்கே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதா என கூறி இருந்தார்.

அது குறித்த கேள்விக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது:- நாம் நமக்கே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதா எனக்கூறி இந்து என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதுவே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் முறையாக தமிழக முதலமைச்சர் இந்து மதத்தினருக்கு வாழ்த்துகளே தெரிவிக்க மாட்டேன் என கூறிக் கொண்டிருந்தவர், நான் இந்து தான் என்பதை அவரது அமைச்சரவையை சேர்ந்த ஒருவரே ஏற்றுக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், ஆனால் அதே நேரத்தில் நமது பக்கத்து வீட்டில் பிறந்ததற்கு குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

அப்போது அது நமக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வது போன்ற ஏன் இந்த பாகுபாடு என்று தான் கேட்கிறோம், பிரித்து பார்ப்பவர்களால் திராவிடத்தை புரிந்து கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள் அல்லவா பிரித்து பார்ப்பதினால் தான் நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள், ஆனால் இன்று அதற்கு புதிதாக ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்கள் இது உலகத்திலேயே இல்லாத ஒரு காரணமாக உள்ளது எனக்கூறினார்.

தமிழக கவர்னர் குறித்து முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக இன்று துரைமுருகன் கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இது குறித்து கேள்விக்கு, ஆளுநர் இப்படி தான் இருக்க வேண்டும் என்று துரைமுருகன் அவர்கள் கூறக்கூடாது அவர் அவரது மகனை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம்.

ஆனால் தமிழக ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர் கூறக்கூடாது அவர் அவருடைய பணியை செய்து கொண்டுள்ளார், அவர் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் ஆனால் அவரை பணி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம். ஆனால் கடுமையான விமர்சனம் செய்யக்கூடாது.

அப்படி என்றால் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதற்கெடுத்தாலும் ஆளுநரிடம் சென்றீர்கள் அப்போது ஆளுநர் தேவைப்பட்டார், இப்போது ஆளுநர் தேவைப்படவில்லையா எனவே நீங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டீர்கள் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!

கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…

29 minutes ago

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…

1 hour ago

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…

2 hours ago

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

3 hours ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

3 hours ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

3 hours ago

This website uses cookies.