தஞ்சை ; அண்ணாமலை, உதயநிதி போன்ற யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது என்று புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவையாறில் நடைபெற உள்ள தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவிற்கு செல்ல புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் எனக் கூறியிருக்கும் கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரிவினை வாத கருத்துக்கள் தமிழ்நாட்டில் அதிகமாக தற்பொழுது வர ஆரம்பித்துள்ள நேரத்தில் அதை அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்கிற அர்த்தத்தில் அதை அவர் கூறியுள்ளார். நான் தமிழ்நாட்டை சார்ந்தவள் தான். என் மொழி தமிழ் மொழி, என் மாநிலம் தமிழ்நாடு, என் நாடு பாரத தேசம்.
ஆளுநர் அவரின் கருத்துக்களை கூறக்கூடாது என்பது இல்லை. அவர் தமிழ்நாட்டின் சில நிகழ்வுகளை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார். மேலும் நான் பாஜகவில் இல்லை ஆளுநராக இருக்கிறேன், அதனால் அரசியல் பேச முடியாது.
அண்ணாமலை,உதயநிதி உள்ளிட்ட யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது, என தெரிவித்தார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.