தஞ்சை ; அண்ணாமலை, உதயநிதி போன்ற யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது என்று புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவையாறில் நடைபெற உள்ள தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவிற்கு செல்ல புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் எனக் கூறியிருக்கும் கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரிவினை வாத கருத்துக்கள் தமிழ்நாட்டில் அதிகமாக தற்பொழுது வர ஆரம்பித்துள்ள நேரத்தில் அதை அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்கிற அர்த்தத்தில் அதை அவர் கூறியுள்ளார். நான் தமிழ்நாட்டை சார்ந்தவள் தான். என் மொழி தமிழ் மொழி, என் மாநிலம் தமிழ்நாடு, என் நாடு பாரத தேசம்.
ஆளுநர் அவரின் கருத்துக்களை கூறக்கூடாது என்பது இல்லை. அவர் தமிழ்நாட்டின் சில நிகழ்வுகளை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார். மேலும் நான் பாஜகவில் இல்லை ஆளுநராக இருக்கிறேன், அதனால் அரசியல் பேச முடியாது.
அண்ணாமலை,உதயநிதி உள்ளிட்ட யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது, என தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.