திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருப்பவர் ஸ்டாலின். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்பது போல பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதையடுத்து, கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
இந்த அரசு அமைந்து 2 வருடங்களை வெகு விரைவில் நிறைவு செய்ய உள்ளது. எனினும், தாம் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பட்டம் நடத்தியுள்ளனர். அக்கூட்டத்தில், பெண்மணி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தை ரவுண்டடித்து வருகிறது.
அந்த வீடியோவில், ஸ்டாலின் அவர்களே, கெத்தா இருக்கிறது அல்லவா. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களே என்று இருந்திருக்க வேண்டியது. அதனை, முதல்வராக மாற்றியது நாம் தான்.
இன்றைக்கு, அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் உங்களுக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை 40 அறிக்கை வெளியிட்டு இருப்பார். டி.பி.எஸ்-க்கு அறிக்கை வந்திருக்கும், டி.ஏ.விற்கு அறிக்கை வந்து இருக்கும்.
இந்நேரத்தில், நம்ம நிதியமைச்சரை மறந்து விட்டோம். அவர், உலக வங்கியை உச்சாணி கொம்பில் வைத்தவர். இன்றைக்கு, அவர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தால் அவர் உங்களை பார்த்து என்ன சொல்லி இருப்பார் தெரியுமா? நீங்கள் ஜி எஃப் அல்ல இரண்டு ஜி எஃப்-க்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லி இருப்பார்.
இன்று நாம் செய்த தவறை அனுபவித்து வருகிறோம். ஒருவேளை அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் இன்று அவர் நம்மை சந்தித்து இருப்பார்.
இன்று நம் வாழ்க்கை வடிவேலு காமெடி போல ஆகி விட்டது என்று கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.