முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு பச்சைக்கொடி… தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்!!

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இவ் வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வேலுமணி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தன.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜரானார்.அவர், ”வழக்கு ரத்து கோரிய மனுக்களை, தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும். வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், மத்திய அரசுக்கு ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான ராஜு, இந்த வழக்கில் எப்படி ஆஜராகலாம்?” என வாதிட்டார்.

வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, ”மத்திய அரசின் அனுமதி பெற்றே, இவ்வழக்கில் ஆஜராகிறேன். ”அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரித்ததால், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களையும், இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம்,” என்றார்.

தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக, முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய மனுக்களை, தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என, அட்வகேட் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது.
அவ்வாறு விசாரித்தால், மாறுபட்ட கருத்துக்கள் எழலாம். அதனால் தான், வழக்கு ரத்து கோரிய மனுக்களை, பொதுநல வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளை முதல் அமர்வு விசாரிப்பதற்கு, அட்வகேட் ஜெனரல் தெரிவித்த ஆட்சேபனையில் நியாயம் இல்லை. மத்திய அரசு சார்பில் ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, இவ்வழக்கில் வேலுமணிக்கு ஆஜராகவும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் ராஜுவுக்கு வழங்கப்பட்ட அனுமதியின்படி, அவர் ஆஜராகிறார். அவர் ஆஜராவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதை ஏற்க முடியாது, அது, நிராகரிக்கப்படுகிறது என முதல் அமர்வு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வேலுமணி மீதான வழக்கை, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க தடை விதிக்க மறுத்தது.

வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனக்கூறியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

2 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

2 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

3 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

3 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

4 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

4 hours ago

This website uses cookies.