கடந்த வாரம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தை கூறாமல் கைது செய்துவிட்டனர் என கூறி செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற விதி 41ஏவின்படி எதற்காக கைது செய்கிறார்கள் என்பதை கைது செய்யப்படுவோரிடம் கூற வேண்டும். ஆனால் கைது காரணத்தை என்னவென்றே அமலாக்கத்துறை கூறவே இல்லை.
சட்டவிரோதமாக இந்த கைது நடைபெற்றுள்ளது என பல்வேறு வாதங்களை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முன்வைத்தார். 2 மணிநேரமாக நடைபெற்ற இந்த வாதத்தை அடுத்து, அமலாக்கத்துறைனர் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க தங்களுக்கு அவகாசம் கேட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.