ராணிப்பேட்டை ; டாஸ்மாக் மதுகுடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்பு அழப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி குடித்த இருவர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது எப்படி கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார்.
அரசு டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு முழுப்பொறுப்பையும் ஏற்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.