முதல்ல உண்டியலில் இருந்து கைய எடுங்க… விமர்சித்த நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பிளாக் செய்தாரா உதயநிதி?!!

முதல்ல உண்டியலில் இருந்து கைய எடுங்க… விமர்சித்த நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பிளாக் செய்தாரா உதயநிதி?!!

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் “டெங்கு, மலேரியா, கொரோனா, கொசு போன்றவற்றை ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது.

அதுபோன்று சனாதனம் சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் டெல்லியை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல் நிலையத்தில் அமைச்சர் உதயநிதி சனாதான தர்மத்தை இழிவுப்படுத்தியதாக இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளார்.

பெரும் சர்ச்சைக்கு ஆளான உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே… அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க!” என மு.க ஸ்டாலின் குடும்பம் முதல் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை வரை ரவுண்டு கட்டி விமர்சனம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் 03/09/23 உதயநிதி ஸ்டாலின் என்னை பிளாக் செய்துள்ளார். இதற்கான காரணம் ஏன் என புரியவில்லை என பதிவு செய்த அவர், Afterall அவ்வளவுதானா என கிண்டலடித்தும் உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.