பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த சட்டமானது இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறி அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த பலகை அப்புறப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பழனி கோவிலில் இந்து அல்லாதவர்களை கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும், மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாற்று மதத்தை சார்ந்தவர்களிடம் கடவுள் மீது நம்பிக்கை உண்டு என்ற உறுதிமொழி எழுதி வாங்கிய பின் அனுமதிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.