கணவன் ஆணவக் கொலையால் பறிபோன உயிர்.. 10 நாட்களாக போராடிய மனைவி : சிக்கிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!

கணவன் ஆணவக்கொலையால் பறிபோன உயிர்.. 10 நாட்களாக போராடிய மனைவி : சிக்கிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மூன்றாமாண்டு கல்லூரி படிக்கும் மாணவி, அதே பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பிரவீன், தனது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வெளியில் சென்றுள்ளார்.

வெளியில் சென்ற பிரவீனை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாங்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க: கெஜ்ரிவாலுக்கு HIGH SUGAR.. சிறையில் செலுத்தப்பட்ட இன்சுலின் : ஆம் ஆத்மி போட்ட PLAN!

மருத்துவமனையில் அனுமதித்ததும், பிரவீன் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து தாம்பரம் காவல்துறையினர் கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், கொலை செய்தது ஷர்மிளாவின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் என்றும், மாற்று சமூகத்தை சேர்ந்த பிரவீன் தனது தங்கையை திருமணம் செய்த காரணத்தால் நடைபெற்ற கொலை என்பதால் ஆணவக்கொலையாக பிரவீன் மரணம் வழக்கு பதிவு செய்தனர்.

கொலை செய்த ஷர்மிளாவின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரவீன் இறந்த தூக்கம் தாளாமல் சர்மிளா வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார்.

இதில் கழுத்து நரம்புகள் உடைந்த நிலையில் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனல் சிகிச்சை பலனின்றி கோமாவில் இருந்த ஷர்மிளா இன்று உயிரிழந்தார்.

அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தன் கணவர் இல்லாத உலகில் நானும் இருக்க மாட்டேன் என்றும், தன் சாவுக்கு தனது குடும்பத்தினர் தாய், தந்தை, சகோதரர்கள் தான் காரணம் என்றும் தந்தை துரை, தாயார் சரளா, அண்ணன்கள் நரேன், தினேஷ் ஆகியோர்தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டு உள்ளார் ஷர்மிளா.

ஏற்கனவே ஷர்மிளாவின் அண்ணன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பெற்றோர்கள் மீதும் வழக்கு விசாரணை பாய்ந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.