பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் சமீப நாட்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். ரீசன்ட்டாக “நசுக்கப்பட்டோம் பிதுக்கபட்டோம் என்று வாரிசு நடிர்களை வைத்து படமெடுக்கிறார்கள்” என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்திற்கு ரியாக்ட் செய்த ஆளும் தரப்பை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியினர் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் வசை பாடி தீர்த்தனர்.
இதனால் கடுப்பான பாலாஜி முருகதாஸ் தற்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை குறித்தும் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டுள்ளது இணையத்தை சற்று சூடாக்கியுள்ளது. பாலாஜி முருகதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் ‘உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது..?அவரது தாத்தா ட்ரெயினில் வித்அவுட் டிக்கெட்டில் வந்ததற்கு கைது செய்திருக்க வேண்டும், இப்படி இருக்க எப்படி உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு சொத்து வந்தது!!?? பதில் சொல்லுங்கடா..’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது அடுத்தடுத்த பதிவுகளில் இதே கேள்வியை மீண்டும் கேட்டு ஆளும் தரப்பிற்கு ஆதரவாகவும் தனக்கு எதிராகவும் கருத்துகள் பதிவிடுபவரிடம் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய போவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையே நேரடியாக வம்பு இழுத்து கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவிற்கு விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் முன்ஜாமீன் ரெடி பண்ணிக்கோங்க ப்ரோ என்று பாலாஜி முருகதாஸ்க்கு அறிவுரையும் கூறி வருகின்றனர்.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.