அதிகாரப்பசி.. மனிதராக இருக்க தகுதியற்றவர் மோடி : நடிகர் கிஷோர் காட்டமான விமர்சனம்..!!
தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழி சினிமாக்களில் நடித்து வருபவர் நடிகர் கிஷோர். குறிப்பாக நல்ல கதையை தேர்ந்தெடுத்து மட்டும் நடித்து வரும் இவரின் கதாபாத்திரங்கள் எப்போதும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்தது முதலே நடிகர் கிஷோர், பிரதமா மோடி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் கிஷோர் தற்போது தடித்த வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடியின் பேச்சு 2 பாகங்களாக உள்ளது. இந்து மதத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி மே 14, மே 15 ஆகிய தேதிகளில் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.
அதில் நடிகர் கிஷோர், ஆமாம். அவர் (பிரதமர் மோடி) பொது வாழ்க்கைக்கு பொருத்தமானவர் இல்லை. அவர் மனிதனாக இருக்க தகுதியில்லாதவர். அவரை போன்ற ஒருவரின் வாய் மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க: கனமழையால் வெள்ளத்தில் மிதந்த வீடுகள்.. புகார் அளித்தும் யாரும் வராததால் தூய்மை பணியாளராக மாறிய மக்கள்!
அவரது வார்த்தைகள் மற்றும் செயல்பாடே உலகில் தன்னை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, மூர்க்கவாதி, மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், உணர்வற்றவர், கண்ணியமற்றவர், மக்களுக்கு எதிரான ஆட்சி செய்பவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த எதேச்சதிகாரி இல்லை என்பதை காட்டும்.
10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த பிறகும் கூட விவசாயிகள், ராணுவம், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளை மேம்படுத்த செயல்படுத்திய திட்டங்கள் பற்றி பேசாமல் பொய்களை கூறி வெறுப்புகளை மட்டும் விதைக்கிறார்.
மேலும் கற்பனையான ஷரியா வரிகள், வாக்கு ஜிகாத், இந்த நாட்டு மக்களை ஊடுருவல்காரர்கள் என்று சொல்வது, பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள், கோவில்களை பூட்டிவிடுவார்கள் என்று பேசி வருகிறார்.
இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ அதேபோல் அவரால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படலாம் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.