மதுரை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் எனக் கூறி, அதிகாரிகளை பெண் ஒருவர் அலறச் செய்த சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி பலர் சர்ச்சையை கிளப்பினர். ஆனால், இந்த சர்ச்சை வெளியான சில நாட்களிலேயே உண்மையும் அம்பலமாகிவிடும். மேலும், ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் மகள் என்று மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறி, அதிகாரிகளை திடுக்கிட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. எனது தாயார் பெயர் ஜெயலலிதா என்றும், அவர் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வந்ததாகவும், அவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகக் கூறி, ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அந்த வாரிசு சான்றிதழ் மனுவை நிராகரித்துள்ளனர்.
இதனால், கோபமடைந்த அவர், தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, தன்னை சசிகலாவின் கணவர் நடராஜன் சந்தித்து, காவல்துறை அதிகாரிகளிடம் இவர்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் எனக் கூறியதாவும் சொல்லி, அதிகாரிகளை அதிரச் செய்துள்ளார். மேலும், தான் கருப்பாக இருப்பதால் அதிகாரிகள் இந்த உண்மையை நம்ப மறுப்பதாகவும், நீதிமன்றம் சென்றாவது நான்தான் உண்மையான வாரிசு என்பதை நிரூபிப்பேன் எனக் கூறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்று, இதுபோல சொல்லி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.