மக்களை நம்புறவன் நான்.. யாருடனும் கூட்டணி இல்லை : என்னைக்குமே தனி தான்…. சீமான் பேட்டி!!
2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாத காலமே உள்ளதால் பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து உள்ளனர்.
ஏற்கனவே திமுக தங்கள் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி அண்மையில் முறிந்து, அதிமுக தனி அணியாகவும், பாஜக தனி அணியாகவும் தங்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர், அதிமுகவுடன் , சீமானின் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக ஒரு செய்தி உலா வந்தது. இது குறித்து அப்போதே பேசிய சீமான், இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்தார்.
தற்போது இதே கேள்விக்கு மீண்டும் சீமான் பதில் கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூட்டணி குறித்து கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி கிடையாது. வழக்கம் போல மக்களை நம்பியே நாங்கள் தேர்தல் களம் காண உள்ளோம் என தெரிவித்தார்.
அடுத்து லியோ திரைப்பட விவகாரம் குறித்து பேசுகையில், இதுவரை இல்லாத அளவுக்கான நெருக்கடியை விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்திற்கு தமிழக அரசு கொடுத்து வருகிறது. விஜய் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக கூறப்படுவதால் இந்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் சீமான் விமர்சனம் செய்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.