இந்தி எனக்கு புரியாது.. 100 வருஷம் ஆகிடுச்சு : ஜெயலலிதாவை குறிப்பிட்டு நாடாளுமன்றத்தை அலற வைத்த கனிமொழி!!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 3ஆம் நாள் கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. புதிய நாடாளுமன்றத்தில் 2ஆம் நாளாக நடைபெற்று வரும் கூட்டத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

நேற்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவல் பணியாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாப்படி, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.

இந்த சட்ட மசோதாவானது 2026இல் மக்களவை தொகுதி மறுவரையறை செய்த பிறகு நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இந்த மசோதா குறித்த விவாத்தின் போது காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறி காங்கிரஸ் எம்பி சோனியாகாந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அதன் பிறகு திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார். அவர் கூறுகையில், 1920ஆம் ஆண்டே பெண்களுக்கான உரிமைக்காக நீதிக்கட்சி போராடியது. 1927ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் எம்எல்ஏ தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் தான் இந்தியாவில் தேவதாசி முறையை ஒழித்தார்.

அதன் பிறகு சட்டமன்றம் , நாடளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பெற 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1929ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை இயக்க போராட்டத்தை முன்னெடுத்தார். 1996ஆம் ஆண்டு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அப்போதைய பிரதமர் தேவகவுடா திமுக ஆதரவோடு கொண்டு வந்தார்.

2010இல் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை எந்தவித கட்டுப்பாடுகள் இன்றியும் காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்தது. 13 வருடங்கள் கழித்து தற்போது அந்த சட்டம் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது நான் மாநிலங்களவை எம்பியாக இருந்தேன். இப்போது மக்களவை எம்பியாக இருந்து கொண்டு மீண்டும் அதே சட்ட மசோதா குறித்து பேசி வருகிறேன்.

2014ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற கூறி மத்திய அரசை கேட்டுக்கொண்டார். அதன் பிறகு 2017இல் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த சட்டத்தை நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தினர்.

அந்த சமயம் பாஜக எம்பிக்கள் ஹிந்தியில் கூச்சலிட்டனர். அப்போது கனிமொழி எம்பி, இந்தியில் கூச்சலிட்டால் எனக்கு புரியாது என ஆங்கிலத்தில் பதில் கூறி மீண்டும் பேச தொடங்கினார். அவர் மேலும் கூறுகையில், இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற ஏன் இவ்வளவு தாமதம்.? ஏன் இதனை ரகசியமாக வைத்து இருந்து இப்போது தாக்கல் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்களையும் நாடாளுமன்றத்தில் கனிமொழி குறிப்பிட்டார். அதில், 2024இல் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ஒரு நாடகம். இந்த சட்டம் எப்போது அமல்படுத்தப்படும் தொகுதி வரையறை என கூறி ஏன் 2026 வரை தாமதமாகிறது என்பதை குறிப்பிட்டார்.

“பட்டங்கள் ஆள்வதும் , சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண் இங்கே இழைப்பில்லை பெண்ணே கும்மியடி”

என்று பாரதியார் பாடலையும் கூறி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டட மசோதா குறித்து திமுக எம்பி கனிமொழி தனது கருத்துக்களை குறிப்பிட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.