கள்ளக்குறிச்சி மாவட்டம் கூடலூரில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கு ஒரு அலுவலகம் இருக்கும். ஆனால் அதிமுகவிலோ சசிகலா அணி, தீபா அணி, ஓபிஎஸ், ஈபிஎஸ் என மூன்று, நான்கு அலுவலகங்கள் இருக்கின்றன. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் எங்கு செல்வது என திணறி வருகின்றனர்.
இதேபோல் பாஜகவுக்கும் ஐடி, ஈடி உள்ளிட்ட அணிகள் உண்டு. அவர்கள் தேர்தல் நேரத்தின் போது இறக்கி விடப்படுவார்கள். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நான் குறிப்பிடும் இந்த பாஜக அணியில் உள்ள 95 சதவீதத்தினர், மற்ற கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஊழல் ஒழிப்பு பற்றி பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி மறுக்கிறார்.
கடந்த ஆட்சியின் போது, அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சிக்கியவர்களிடம் சோதனை நடத்தவில்லை. மாறாக அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டனர்.
அதுபோல திமுகவையும் மத்திய பாஜக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியோ, ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியோ அல்ல.
தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி. உங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ED (அமலாக்கத்துறை) க்கும் பயப்பட மாட்டோம். உங்கள் பம்மாத்து வேலையெல்லாம் திமுகவிடம் நடக்காது.
சென்ற மாதம் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு. இந்த மாதம் அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு. இரண்டிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. அடுத்த அமலாக்கத்துறை ரெய்டு எனது வீட்டில் தானாம். பாஜகவினர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
வா.. என்னோட அட்ரஸ் வேணும்னாலும் கொடுக்குறேன். உன் ED-க்குலாம் பயப்படுற ஆளா நான். நான் யாரு.. நான் கருணாநிதி பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன். நான் உங்க மோடியைப் பார்த்தும் பயப்பட மாட்டேன். உங்க ஈடியை பார்த்தும் பயப்பட மாட்டேன்.
எனக்கு மடியிலும் கனம் இல்லை. வழியிலும் பயம் கிடையாது. நான் சவால் விடுறேன். வா.. எப்போ வேணா வா. ஆனா சொல்லிட்டு வா” என சவால் விட்டுப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.