நான் சனாதனவாதி.. என்னை விமர்சிப்பவர்களை ஒதுக்க மாட்டேன் : ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு!!!
ஆளுநர் ஆர்.என்.ரவியும், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தொடர்ந்து திமுகவின் கொள்கைகள் பற்றி விமர்சனங்கள் முன்வைத்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் சொல்லும் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதனையும் விமர்சித்து வருகிறார் ஆளுநர். திமுகவினர் தொடர்ச்சியாக எதிர்த்து வரும் ‘சனாதனம்’ தொடர்பாக தொடர்ந்து உயர்வாகப் பேசி வருகிறார் ஆளுநர். நேற்று கூட கடலூர் மாவட்டம் ஆதனூரில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் 100 பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவருவுச்சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார். பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார் ஆளுநர் ரவி. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது, சனாதனத்தின் வெளிப்பாடு.” எனத் தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம், மனித குலத்துக்கே விரோதமானது என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அண்மையில் கூட திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். இப்படியான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி தன்னை ஒரு சனாதனவாதி என வெளிப்படுத்தியுள்ளது விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.